பெண் விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல்லில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
நாமக்கல் முதலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 37). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த செல்லம்மாள், விஷம் குடித்து விட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த செல்லம்மாள் நேற்று சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.
இது குறித்து இளஞ்செழியன் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக செல்லம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.