தேய்பிறை பஞ்சமியையொட்டி அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Update: 2023-02-10 18:45 GMT

தர்மபுரி:

தேய்பிறை பஞ்சமியையொட்டி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் நேற்று யாக பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்கள் மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள், பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அஷ்ட வராஹி அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்