விஷம் குடித்த முதியவர் சாவு

எருமப்பட்டி அருகே விஷம் குடித்த முதியவர் இறந்தார்.;

Update:2023-02-20 00:15 IST

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் கிழக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லட்சுமி (65), அக்கம்பத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் 17-ந் தேதி இரவு உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்