புகையிலை விற்றவர் கைது

மணல்மேடு கடைவீதியில் புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-05-31 18:45 GMT

 மணல்மேடு:

மணல்மேடு கடைவீதி பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்திவருபவர் கிழாய் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 48). இவரது கடையில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்தனர். அப்போது 2 பாக்கெட் ஹான்ஸ் என்ற புகையிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்