இந்தோனேசியாவுக்கு தேனிலவு சென்றபோது சோகம்: கடலில் மூழ்கி புதுமண தம்பதி பலி

இந்தோனேசியாவுக்கு தேனிலவு சென்ற புதுமண டாக்டர் தம்பதி படகில் போட்டோ சூட் நடத்தியபோது கடலில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2023-06-09 23:12 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விபூஷ்ணியா. டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், சென்னையை சேர்ந்த டாக்டராக பணிபுரிந்து வந்த லோகேஸ்வரன் என்பவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 1-ந் தேதி பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில், திருமணம் நடந்து முடிந்த கையோடு புதுமண தம்பதிகளான இருவரும் தேனிலவுக்காக இந்தோனேசியா நாட்டிற்கு சென்றனர். இதற்கிடையே நேற்று அங்குள்ள சுற்றுலா தளத்தில் கடலில் மோட்டார் படகில் சென்றபடி போட்டோ சூட் நடத்தியதாக கூறப்படுகிறது.

கடலில் மூழ்கி சாவு

இதில் நிலை தடுமாறி விழுந்ததில் இருவரும் கடலில் முழ்கி இறந்து போனார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் லோகேஸ்வரன் உடலை மீட்டு விட்டதாகவும், விபூஷ்ணியா உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவல் விபூஷ்ணியா வீட்டிற்கு தெரியவந்த நிலையில் அவரது வீட்டின் முன்பு உறவினர்களும், பெற்றோர்களும் கூடி கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்து போன புதுமண ஜோடியின் உடல்களை சென்னைக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. திருமணம் முடிந்து தேனிலவு சென்ற இடத்தில் டாக்டர் புதுமண தம்பதிஇறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்