தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு;

Update:2023-03-06 00:15 IST

ஆனைமலை

ஆனைமலை அடுத்த திவான்ஷா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 27 -ந் தேதி இவரது மனைவி அம்சவேணி (30) அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ரங்கசாமி வேலைக்கு சென்று விட்டு மது அருந்திவிட்டு வந்தவர் வீட்டின் அருகே உள்ள ஓலை குடிசை சமையலறையில் போதையில் புகைப்பிடிப்பதற்காக தீக்குச்சியை அணைக்காமல் தூங்கி உள்ளார். இதனால் சிறிது நேரத்தில் ஓலை குடிசை மளமளவென எரியத் தொடங்கியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து ரங்கசாமியை மீட்னர்.

ஆனாலும் தீ விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி உயிரிழந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்