ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனத்தை மூட முடிவு..!

ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாகவும், வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-13 23:28 GMT
கோப்புப் படம் AFP
மாஸ்கோ,

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், ரஷியாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து போர் நடத்தி வருகிறது.

ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், ரஷியாவில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டுள்ளன. இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது ரஷிய அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவரான நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷிதாவை பிரிட்டன் நிதியமைச்சரான ரிஷி சுனக் திருமணம் செய்துள்ளார். 

இன்போசிஸ் நிறுவன பங்குகளில் சுமார் 400 மில்லியன் பவுண்ட் அளவில் அக்ஷிதாவிற்கு உள்ளது. இதனால் ரஷியாவிலிருந்து ஆதாயம் பெற்று வருவதாக ரிஷி சுனக் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனை ரிஷி சுனக் மறுத்தார். இந்த சூழ்நிலையில் ரஷியாவில் செயல்பட்டு வந்த இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாகவும், அங்கு அனைத்து வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்