கொரோனா பரவல் அதிகரிப்பு: சீனா சுரங்க ரெயில் நிலையங்கள் மூடல்

சீனாவில் உள்ள 40 சுரங்க ரெயில் நிலையங்கள் நேற்று முதல் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

Update: 2022-05-04 21:13 GMT
சீனாவின் ஷாங்காய் நகரைப் போல தலைநகா் பெய்ஜிங்கிலும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக, அந்த நகரின் 40 சுரங்க ரெயில் நிலையங்கள் நேற்று முதல் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

அந்த நிலையங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

பெய்ஜிங்கில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததையடுத்து, அந்த நகரம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்