டோக்கியோவுக்கு டூர்..!! ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டாடல் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை டோக்கியா நகரில் உள்ள டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் சென்றது.

Update: 2023-10-31 20:34 GMT

கோப்புப்படம்

வாஷிங்டன்,

ஜப்பானை சேர்ந்தவர் தொழில் அதிபர் கென்னத் சி.கிரிபின். சிட்டாடெல் என்ற நிதி நிறுவனம், கணினி தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல தொழில்களை செய்யும் இவர், தனது நிறுவன ஊழியர்களை நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவையொட்டி மகிழ்விக்க விரும்பினார்.

அதற்காக 1200 ஊழியர்களை, அவர்களது குடும்பத்தினருடன், 3 நாள் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார். டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்வது, அந்த 3 நாட்களுக்கான தங்குமிடம், உணவு என அனைத்து வசதிகளுக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

 



டிஸ்னிலேண்ட் கட்டணம் மட்டும் குறைந்தபட்சம் 88 ஆயிரம் டாலர் இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.72 லட்சமாகும். மொத்த செலவுத்தொகையை அவர் வெளியிடவில்லை. இதுபற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இதனிடையே இந்தியாவின் குர்கான் நகரில் இருந்து இந்நிறுவன பணியாளர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்