நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை அரசு மிக விரைவில் நசுக்கும்: பாக். பிரதமர் பேச்சு

பாகிஸ்தானின் பக்துங்வா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார்.

Update: 2022-12-27 22:09 GMT

கோப்புப்படம் 

பாகிஸ்தான்,

பாகிஸ்தானில் சமீப வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நாட்டில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், அரசு மிக விரைவில் அதை நசுக்கும் என்றும் கூறினார்.

மாகாண அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இல்லாதொழிக்கும் என அவர்சூளுரைத்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்