கோவிலுக்குள் தண்ணீர் ஊற்று

திருமழப்பாடி கோவிலில் கோவிலுக்குள் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும்.

Update: 2018-03-20 09:48 GMT
திருமழப்பாடி கோவிலில் சுந்தராம்பிகை, பாலாம்பிகை என 2 அம்மன் சன்னிதிகள் உள்ளன. இதில் பாலாம்பிகை சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. எந்த பக்கத்தில் இருந்து நாம் பார்த்தாலும், அந்த திருமேனி நம்மை பார்த்து புன்னகை செய்வது போன்று இருக்கும். தல விருட்சமான பனை மரத்தின் அருகே 4 நந்திகள் உள்ளன. அவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை குறிப்பதாக கூறப்படுகிறது. கோவிலின் உள் தளம் கொள்ளிடம் ஆற்றின் கரைக்கு சமமாக உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதும், மழைக் காலங்களிலும் கோவிலுக்குள் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும். 

மேலும் செய்திகள்