ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது பஞ்சாப்

இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் எப்.சி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

Update: 2024-04-10 16:56 GMT

image courtesy: East Bengal FC twitter

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் எப்.சி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், பஞ்சாப் அணி சார்பில் வில்மர் ஜோர்டான் கில் ஆட்டத்தின் 19 மற்றும் 62-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். மேலும், மதிஹ் தலால் ஆட்டத்தின் 43-வது நிமிடத்திலும், லூகா 70-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில், சயான் பானர்ஜி ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்