டெல்லி செங்கோட்டை: அணிவகுப்பு மரியாதை ஏற்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
டெல்லி செங்கோட்டை: அணிவகுப்பு மரியாதை ஏற்கும் பிரதமர் மோடி
இந்த விழா காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழாவுக்கு காலையில் பிரதமர் வருகை தரும் போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்கிறார்கள்.
தொடர்ந்து பிரதமருக்கு டெல்லி பகுதியின் ராணுவ தளபதி அறிமுகப்படுத்தப்படுவார். அவர் பிரதமரை காவலர் மரியாதை பகுதிக்கு அழைத்துச் செல்வார். அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொள்வார்.
இந்த மரியாதையை 3 படைகள் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து தலா 24 பேர் என மொத்தம் 96 பேர் பிரதமருக்கு அளிக்கிறார்கள். ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்குகிறது.
அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு செல்கிறார். அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜநாத் சிங் தலைமையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் முன்னிலையில் முப்படைகளின் தளபதிகள் பிரதமரை மீண்டும் வரவேற்பார்கள்.