செமி கண்டக்டர் துறையில் இந்தியா முன்னிலை : பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
செமி கண்டக்டர் துறையில் இந்தியா முன்னிலை : பிரதமர் மோடி
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
அடிமைத்தனம் தான் நம் நாட்டை ஏழ்மையாக்கியது. நமது திறமையை பாதுகாக்க, மேலும் அதிகரிக்க தன்னிறைவு மிகவும் முக்கியம். ஆபரேஷன் சிந்தூர் - நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த யுகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு வருகிறது - தொழில்நுட்பம் தான் வாழ்க்கை. இந்தியாவில் ஏற்கனவே 6 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. மேலும் 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சிப்-கள் சந்தைக்கு வந்துவிடும். செமி கண்டக்டர் உற்பத்தி துறையில் இந்தியாவின் வளர்ச்சியை இனி தடுக்கவே முடியாது
10 புதிய அணுமின் உலைகள் அமைக்கப்பட உள்ளன. எரிசக்தி துறையில் நம் நாடு தன்னிறைவு பெற வேண்டியது அவசியம். பெட்ரோல், டீசல், எரிவாயு - இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.