நடுவானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
நடுவானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பரபரப்பு
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடு வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
வானில் பறந்தபோது கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அவசரமாக சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டது.
நள்ளிரவு 12.10 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் 166 பயணிகள் உயிர்தப்பினர்.
தற்போது கோளாறு சரிசெய்யப்படாததால் இன்று மாலை கோழிக்கோடு புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
Update: 2025-08-15 06:27 GMT