தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு - முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 22,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், அவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின விழாவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை முதல்-அமைச்சர்களுக்கு பெற்றுத் தந்தவர் கலைஞர். அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என தலைவர்கள் கனவு கண்டனர்.
சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் தியாகிகளை போற்றுவோம். அனைத்து சமூக மக்களும் ரத்தம் சிந்தி பெற்றது நம் விடுதலை.
1967இல் திமுக ஆட்சிக்கு வரும் முன் தியாகிகளுக்காக 3 நினைவு மண்டபங்கள்தான் இருந்தன. தியாகிகளை தொடர்ந்து போற்றிவரும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. பெரும்பாலான தியாகிகளுக்கு மனிமண்டபம், சிலைகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்” என்று கூறினார்.