பயங்கரவாத முகாம்கள் தவிர, வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை - லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய்

பயங்கரவாதிகளை மட்டும்தான் தாக்கினோம் என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளோம் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. பயங்கரவாதிகளை மட்டுமே தாக்குவதை உறுதியாகக் கொண்டோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை தெரிவித்துள்ளோம். 

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலாகவே இதை நாங்கள் தொடங்கினோம்.பாகிஸ்தான் ராணுவ தலைமை, தாக்குதல் நிறுத்ததிற்கு அமெரிக்காவிடம் முறையிட்டது. பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் நேற்று அழைத்து, தாக்குதல் நிறுத்தயோசனையை முன்வைத்தார். நாளை பகல் 12 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவ இயக்குநரோடு, பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். நமது தாக்குதல் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது

பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அதிகம் பேர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் இன்று தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று லெப்டினன்ட் ஜெனரல் ராஜுவ் காய் கூறியுள்ளார். 

Update: 2025-05-11 13:29 GMT

Linked news