'எங்கள் ஆயுதப்படைகள் குறித்து... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

 'எங்கள் ஆயுதப்படைகள் குறித்து பெருமைப்படுகிறோம்' - அமித் ஷா

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) "இலக்கு வைக்கப்பட்ட மற்றும் துல்லியமான" ராணுவத் தாக்குதல்களை நடத்தியதற்காக ஆயுதப்படைகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பாராட்டினார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஆயுதப்படைகளைப் பற்றி பெருமைப்படுகிறோம். பஹல்காமில் எங்கள் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்பது பாரதத்தின் பதில். இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசாங்கம் உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து ஒழிப்பதில் பாரதம் உறுதியாக உள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-05-07 04:33 GMT

Linked news