கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தப்பியோட்டம்
வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக முருகன் என்பவர் புகார் அளித்திருந்தார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை எஸ்.சி. எஸ்.டி சட்டப்படி கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சீருடையுடன் கைது செய்யப்பட்டார் டிஎஸ்பி சங்கர் கணேஷ். இந்தநிலையில் சக காவலர்கள் உதவியுடன் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2025-09-08 13:08 GMT