உத்தரவிட்டும் ஏன் கலைந்து செல்லவில்லை? ஐகோர்ட்டு கேள்வி
போராட்டத்தின்போது நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி காவல்துறையினர் அத்துமீறியதாக தூய்மை பணியாளர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கலைந்து செல்ல மறுத்ததால் தூய்மை பணியாளர்களை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என தூய்மை பணியாளர்கள் தரப்புக்கு கேள்வியெழுப்பிய சென்னை ஐகோர்ட்டு, 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-09-11 09:06 GMT