இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: மழையால் மீண்டும் பாதிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருபோட்டியில் இந்திய அணி 11.5 ஓவர்களில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா 8 ரன்களும், சுப்மன் கில் 10 ரன்களும், விராட் கோலி (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னும், அக்சர் படேல் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹசில் வுட், எல்லீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்ற பின் போட்டி மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-10-19 04:53 GMT

Linked news