மீண்டும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆனார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
மீண்டும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆனார் பொன்முடி
திமுக துணைப் பொதுச்செயலாளராக பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்தார்.
மேலும் அமைச்சர் மு.பெ. சுவாமி நாதனுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ள நிலையில், தற்போது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
Update: 2025-11-04 08:04 GMT