இன்சூரன்ஸ் பணத்திற்காக நூதன மோசடி
ரெயிலில் நகை திருடுபோனதாக நாடகம் ஆடி, அதற்கான இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்று மோசடி செய்வதை வாடிக்கையாகக் கொண்ட தம்பதியை, விழுப்புரம் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மகாலிங்கம் - ருக்மணி தம்பதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 140 கிராம் நகைகள், ரூ.30.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-11-06 11:15 GMT