நடிகர் திலீப் விடுதலை
கேரளாவில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று எர்ணாகுளம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி எர்ணாகுளம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. வழக்கில் முதன்மை குற்றவாளிகளான சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நடிகையின் உதவியாளராக இருந்த பல்சர் சுனில் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
Update: 2025-12-08 05:45 GMT