ஜம்மு காஷ்மீரில் 11 இடங்களில் சோதனை
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் சந்தேகத்திற்கிடமான 11 இடங்களில் பல்வேறு அமைப்பினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத வலையமைப்பு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை, காவல்துறை, மாநில புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட அமைப்பினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முதல் நடைபெற்று வந்த சோதனையில் மின்னணு சாதனங்கள் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைக்கு உதவியதாக 150 சந்தேக நபர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-05-14 04:54 GMT