உக்ரைன் போரில் 3,752 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் -ஐ.நா.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில், இதுவரை 28 ஆயிரத்து 300 ரஷிய நாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர், கடந்த ஒரு நாளில் 400 பேரை ரஷியா இழந்துள்ளது என உக்ரைன் கூறுகிறது. மேலும், 1,251 டாங்குகள், 3,043 கவச வாகனங்கள், 586 பீரங்கி அமைப்புகள், 199 ராக்கெட்டுகள், 91 வான் பாதுகாப்பு அமைப்புகள், 202 போர் விமானங்கள், 167 ஹெலிகாப்டர்கள் உள்ளிடட ஏராளமான தளவாடங்களையும் உக்ரைன் அழித்துள்ளதாக அந்த நாட்டின் ராணுவம் கூறுகிறது. இந்தப் போரில் உக்ரைனில் 3,752 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-19 10:03 GMT

Linked news