திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான... ... செய்திகள் சில வரிகளில்..

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான நிலையில், வல்லுநர் குழு ஆய்வு தொடங்கியுள்ளது. சுரங்கத்துறை ஆணையர் சரவணன் வேல்சாமி தலைமையில் 9 பேர் கொண்ட குழு மலை மீது ஆய்வு செய்து வருகிறது. குழுவில் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல்துறை, சுரங்கத்துறை உள்ளிட்ட நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.  

திருவண்ணாமலை தீபமலையின் மண்ணின் தன்மை ஆய்வு செய்து இன்று நண்பகலுக்கு மேல் அறிக்கை அளிப்பார்கள்.13-ம் தேதியன்று மகாதீபத்தன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? - ஆய்வுக்குப் பின் தெரியும். மலையில் ஆங்காங்கே மரத்தில் பாறைகள் தொங்குவதாகவும் புதைகுழிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெரும் பாதை என அழைக்கப்படும் முலைப்பால் தீர்த்தம் வழியாக பக்தர்கள் செல்லும் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Update: 2024-12-08 05:40 GMT

Linked news