ஆபரேஷன் சிந்தூர்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.