விமான விபத்து; அகமதாபாத் விரைந்த விமான விபத்து புலனாய்வு குழு
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.
தற்போது விபத்து நடந்த இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தை (AAIB) சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் அகமதாபாத் விரைந்துள்ளனர்.
Update: 2025-06-12 12:06 GMT