விமான விபத்து: ஏர் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் - போயிங் நிறுவனம்

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விமான விபத்தை தொடர்ந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ‘எக்ஸ்’ வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியாவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். விபத்தில் சிக்கிய பயணிகள், விமான பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-06-12 12:27 GMT

Linked news