உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதி - வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு

உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து,  இந்திய - அமெரிக்க சமூகத்திற்காக வெள்ளை மாளிகையின் கதவுகள் பெரிய அளவில் திறக்கப்பட்டுள்ளன என்றும், பிரதமர் ஆன பிறகு பலமுறை வெள்ளை மாளிகை வந்தபோதிலும் தற்போது பெரிய அளவில் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களது கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர் என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-06-22 15:46 GMT

Linked news