பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அமெரிக்காவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வருவதாகவும், அமெரிக்க வாழ் இந்தியர்களை பெருமைப்படுத்தியதற்காக ஜனாதிபதி பைடன் மற்றும் டாக்டர் ஜில் பைடனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய விவகாரங்கள் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2023-06-22 16:22 GMT

Linked news