நாடாளுமன்றத்தை கூட்ட ரணில் விக்ரமசிங்கே அவசர அழைப்பு
இலங்கையில் போரட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அதிபர் மாளிகையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடினார். இலங்கையில் கடுமையான நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற அவசர கூட்டத்தை கூட்ட சபாநயகருக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
Update: 2022-07-09 09:15 GMT