வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் ஐடி ஊழியர் கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் ஐ.டி ஊழியரை கடந்த ஜூன் மாதம் குஜராத் போலீசார் கைது செய்த நிலையில், தற்போது சென்னை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் கணவரை பழிவாங்க, அவர் பெயரில் இ-மெயில் ஐடி உருவாக்கி டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு 21 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலமாகி உள்ளது.
Update: 2025-09-08 10:14 GMT