ஒரே குடும்பத்தினர் 4 பேர் தண்ணீரில் குதித்து தற்கொலை முயற்சி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் தண்ணீரில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். குப்பம் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மண மூர்த்தி (50) மனைவி ஜோதி (40), மகள் கிர்த்திகா (20), ஜோதியின் தாயார் சாராதாம்மாள் (75) நால்வரும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீரில் குதித்துள்ளனர். அங்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக தண்ணீரில் குதித்து ஜோதி, கிர்த்திகா இருவரையும் மீட்டனர். லக்ஷ்மண மூர்த்தி, சாராதாம்மாள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Update: 2025-09-10 09:01 GMT