சொத்து குவிப்பு வழக்கு - துரைமுருகன் நேரில் ஆஜராக விலக்கு
சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி துரைமுருகன், அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்களுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Update: 2025-09-10 13:05 GMT