கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி நடந்ததுள்ளது. இது தொடர்பாக வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-08-11 11:37 GMT

Linked news