கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி திடீர் ராஜினாமா
கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஓட்டு திருட்டுப் புகார் தொடர்பாக சொந்த கட்சியான காங்கிரசை கர்நாடக கூட்டுறவு மந்திரி ராஜண்ணா விமர்சித்திருந்தார்.
கர்நாடக மந்திரி கே.என். ராஜண்ணா, ராகுல் காந்தியை விமர்சித்ததாகக் கூறப்படும் கருத்துகளுக்காக, காங்கிரஸ் உயர்மட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் ராஜண்ணா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜினாமா செய்த ராஜண்ணா,முதல்-மந்திரி சித்தராமையாவின் நன்கு அறியப்பட்ட ஆதரவாளர் ஆவார்.
Update: 2025-08-11 12:23 GMT