புறநகர் ரெயில்களில் ஒழுக்கத்தைப் பேணுவது அவசியம் - தென்னக ரெயில்வே
சென்னை புறநகர் ரெயில் பயணத்தில் ஒழுக்கத்தை கடைபிடிக்க பயணிகளுக்கு தென்னக ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், புறநகர் ரெயில்களில் பயணிகளின் செயலால் சக பயணிகள் அவதிக்குள்ளாவது வருத்தமளிக்கிறது. ரெயிலில் ஏறாத நபர்களுக்கு இருக்கைகளை பிடித்து வைப்பது மிகவும் தவறான ஒன்று. எதிர் இருக்கைகளில் கால்களை வைத்துக்கொண்டு பயணிப்பது ரெயில்வே விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். என தென்னக ரெயில்வே அறிவுறுத்தி உள்ளது.
Update: 2025-09-11 11:27 GMT