டெட் தேர்வு; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
ஆசிரியர் பணிக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெட் தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி இருந்தார். நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைவர் என்று ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-11 12:09 GMT