மெட்ரோ திட்டம் - போக்குவரத்தில் மாற்றம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 5 - 6 மணி வரை பரங்கி மலை முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். விமான நிலையம் முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Update: 2025-09-11 14:26 GMT