டிராகன் விண்கலத்திற்குள் சென்றார் சுபான்ஷு சுக்லா
விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் இந்திய விண்வெளி வீரர் சுபாஷ் ஷு சுக்லாவுடன் மற்ற 3 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர். நாசாவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கவு ஆகியோர் பயணம் மேற்கொள்கின்றனர்.
மாலை 4.35 மணிக்கு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்ஹ்டில் இருந்து தனியாக பிரிக்கப்படும். மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கிய தனது 24 மணி நேர பயணத்தை தொடங்கும். நாளை மதியம் 3 மணியளவில் கலிபோர்னியா கடற்கரையில் விண்கலத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் புறப்படுகிறது.
Update: 2025-07-14 09:23 GMT