மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ’நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் கேட்டறிந்தார்
’உங்களுடன் ஸ்டாலின்’ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பணியாற்றி வரும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
’நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் ரத்த பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருவதாக வரும் புகார்களை சரிசெய்ய வேண்டும். முகாம்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு வலியுறுத்தி உள்ளார். பெறப்பட்ட மனுக்கள் உடனடியாக தீர்வுகான வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Update: 2025-08-14 11:37 GMT