சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு
சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தை தொடங்க சீனத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலால், கடந்த 2020-ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-08-14 13:29 GMT