நாளை முதல் இந்திய விமானப் பராமரிப்புப் பொறியாளர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

நாளை முதல் இந்திய விமானப் பராமரிப்புப் பொறியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்


அனைத்து இந்திய விமானப் பராமரிப்புப் பொறியாளர் சங்கத்தினர்(AIAMEU) நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த வேலைநிறுத்தத்தை அவர்கள் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைநிறுத்தம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2025-09-18 08:19 GMT

Linked news