ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025

ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு

சென்னையை அடுத்த ஆவடி அருகே தண்டுரை விவசாயி தெருவில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் இன்று வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்தது.

இந்த வெடிவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைத்து உயிரிழந்த 4 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளியை முன்னிட்டு வீட்டிலேயே பட்டாசுகளை சேமித்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

Update: 2025-10-19 12:22 GMT

Linked news