வடகிழக்கு பருவமழை: தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றின்  கலெக்டர்களுடன் முதல்வர் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.  பேரிடர் மேலாண்மை நிர்வாகிகள், தலைமை செயலாளர் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், முதல் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.

Update: 2025-10-21 06:24 GMT

Linked news