நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-06-2025
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 2 பைபர் படகு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களிடம் இருந்து மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்று இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-06-26 04:03 GMT