முதல்-அமைச்சர் முழுநேர சினிமா விமர்சகராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025

முதல்-அமைச்சர் முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக ஆங்காங்கே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொட்டி வைத்து காத்துக்கிடக்கிறார்கள். 

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விளைநிலங்களில் மழை நீர் வடியாததால் பெரும்பாலான இடங்களில் பயிர்கள் அனைத்தும் அழுகி நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார்.

பின்னர் அவர் தஞ்சை அருகே காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

Update: 2025-10-26 06:28 GMT

Linked news