நீதி கிடைக்கும்வரை என் மகனின் அஸ்தியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024
நீதி கிடைக்கும்வரை என் மகனின் அஸ்தியை கரைக்கமாட்டேன்: தற்கொலை செய்த பெங்களூரு பொறியாளரின் தந்தை பேட்டி
பெங்களூருவில் வசித்து வந்த அதுல் சுபாஷ் என்ற ஏ.ஐ. பொறியாளர் அவரது மனைவி தொடர்ந்த வழக்குகளாலும், ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்தியதாலும் மனமுடைந்து சமீபத்தில் தற்கொலை செய்தார். தற்கொலைக்கு முன்பு அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார். மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அதுல் சுபாஷின் மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனனர்.
இதற்கிடையே, தனது மகன் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை மகனின் அஸ்தியை கரைக்கப்போவதில்லை என அவரது தந்தை கூறி உள்ளார். தன் மகனை துன்புறுத்திய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.